இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ந் தேதி கூட்டப்படும் என அதிபர் சிறிசேனா அறிவிப்பு : அதிபரின் உத்தரவால் முடிவுக்கு வந்தது அரசியல் குழப்பம்

Nov 5 2018 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ந் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேயை கடந்த மாதம் அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அத்துடன் நாடாளுமன்றத்தையும் வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைத்தார். இதற்கு ரனில் விக்ரமசிங்கே மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ஐ.நா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் வலியுறுத்தி வந்த நிலையில், நாடாளுமன்றம் 7-ந் தேதி கூடும் என தகவல் வெளியானது. எனினும் அது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகாததால் நாடாளுமன்றம் கூடுவதில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் 14-ந் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவரது செயலாளர் உதய சேனவிரத்னே மூலம் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இலங்கை நாடாளுமன்றம் கூடுவதில் இருந்த குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00