முதல் உலகப் போர் நினைவுதினம் : லண்டனில் ஆயிரக்கணக்கானோர் தீப்பந்தங்களை ஏந்தி அஞ்சலி
Nov 5 2018 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலாம் உலகப்போரின் நிறைவு நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, லண்டனில் ஆயிரக்கணக்கானோர் தீப்பந்தங்களை ஏந்தி போரில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், முதலாம் உலகப்போர் நிறைவு நூற்றாண்டு நினைவுநாளை நினைவுகூரும் வகையில், வரும் 11-ம் தேதி வரை அந்நாட்டு ராணுவம் சார்பில், இரவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, நேற்று தீப்பந்தங்களால் ஜோதி ஏற்றி, முதலாம் உலகப்போரில் உயிர்த்தியாகம் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இசை ஒலித்ததும், வீரர்கள் தீபஜோதி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து தெரிவித்த பாதுகாப்பு அதிகாரி, ஜெனரல் நிக்கோலஸ் ஹூஸ்டன், முதலாம் உலகப்போரில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கூட்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.