ஈராக்கில் ஐ.எஸ்.பயங்கர வாதிகள் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கல்லறைகள் கண்டுபிடிப்பு - பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவியல் குவியலாக கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என ஐ.நா தகவல்
Nov 7 2018 3:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக்கில் ஐ.எஸ்.பயங்கர வாதிகள் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ஈராக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு, மூன்றில் ஒருபகுதியை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். இந்த நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தில், ஈராக் மற்றும் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. இதில், வெற்றி பெற்றதாக ஈராக் அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
இந்நிலையில், ஐ.எஸ்.பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில், இருந்த நினிவா, கிர்குக், சலா அல்-தின் மற்றும் அன்பர் ஆகிய நான்கு மாகாணங்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பாதுகாப்புபடையினர் என 6 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டு 200க்கும் மேற்பட்ட இடங்களில் குவியல் குவியலாக புதைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.