சிரியாவில் விஷவாயு தாக்குதல் - சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 107 பேர் மருத்துவமனையில் அனுமதி
Nov 26 2018 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவில் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 107 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி தொடங்கிய உள்நாட்டுப் போர் இன்னும் நீடித்து வருகிறது. அங்கு அரசுப்படைகள் அவ்வப்போது பொதுமக்கள் மீது விஷ வாயு தாக்குதலை மேற்கொள்கிறது.
அங்குள்ள அலெப்போ நகரத்தில் விஷ வாயு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால், அங்கு 107 பேர் சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இது பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்த சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம், சுவாச பிரச்சினையால் மருத்துவமனைகளில் 31 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.