இலங்கை உச்சநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும், மதிப்பு அளித்து ஏற்றுக்கொள்வோம் என அதிபர் சிறிசேனா ஒப்புதல் - புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்றப்போவதாகவும் அறிவிப்பு

Dec 10 2018 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை பிரதமர் பதவி குறித்து, உச்சநீதிமன்றம் எந்த தீர்ப்பு அளித்தாலும், அதனை மதிப்பளித்து ஏற்றுக்கொள்வோம் என அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்‍ரமசிங்கேவை பதவி நீக்‍கம் செய்துவிட்டு, ராஜபக்‍சேவை பிரதமராக நியமித்த இலங்கை அதிபர் சிறிசேன, தனது முடிவுக்‍கு பெரும்பான்மை ஆதரவு இல்லாத காரணத்தால் நாடாளுமன்றத்தையும் கலைத்தார். ஆனால், சிறிசேனவின் உத்தரவிற்கு, தடை விதித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், ராஜபக்சே பிரதமராக செயல்படவும் தடை விதத்தது. இதை எதிர்த்து ராஜபக்‍சே மேல் முறையீடு செய்துள்ளார். பிரதமர் பதவிக்‍காக, ரணில் விக்‍ரமசிங்கேவும், ராஜ பக்‍சேவும், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதற்கு மதிப்பு அளித்து ஏற்றுக்கொள்வோம் என அதிபர் சிறிசேன கூறியுள்ளார். வெகுவிரைவில், இலங்கை அரசியலில் நிலவி வரும் குழப்பம் தீரும் என்றும், புதிய பிரதமர் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00