இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே நியமனம் - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்ப்பு

Dec 19 2018 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்தார். இதனால் கடந்த 2 மாதங்களாக இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலவியது. இந்நிலையில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமரானார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சேவை நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார். 2015-ம் ஆண்டில் இருந்து முக்கிய தமிழ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த பதவியில் இருந்துவந்தார்.

ராஜபக்சேவின் நியமனத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.ஏ.சுமந்திரன், இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ரவுப் ஹக்கீம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜபக்சே 2015-ம் ஆண்டு ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் இலங்கை மக்கள் கட்சி உறுப்பினராக உள்ளார். எனவே அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00