இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு - நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மும்முரம்
Dec 24 2018 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே, சுனாமி பேரலைகள் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை நேற்று முன்தினம் வெடித்து சிதறியது. இதன் காரணமாக, கடலுக்கடியில் ஏற்பட்ட அதிர்வால் சுந்தா ஜலசந்தி பகுதியில் சுனாமி பேரலைகள் எழுந்தன. இந்த சுனாமி, தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. சுமார் 65 அடி உயரத்தில் சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டடங்களை தரைமட்டமாக்கின. இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 291 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.