சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்
Jan 4 2019 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
சீனாவின், சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்ஜியான் கவுண்டி பகுதியில் 5 புள்ளி 3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் மற்றும் வணிக வளாக கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தன. வீடுகள் கடுமையாக அதிர்ந்ததால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 15 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டு பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.