அமெரிக்க அரசுத்துறைகள் முடக்கப்பட்ட முடிவில் திடீர் திருப்பம் - பணிக்கு திரும்பிய ஊழியர்கள்
Jan 28 2019 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அரசுத்துறைகள் முடக்கம் முடிவில் திடீர் திருப்பம் ஏற்பட்டதை அடுத்து, ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு திரும்பினர்.
அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டமான மெக்சிகோ வழியாக அமெரிக்காவினுள் நுழைகிறவர்களை தடுக்கிற விதத்தில் எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்பதாகும்.
இதற்குரிய செலவை, மெக்சிகோ தர மறுத்து விட்ட நிலையில், உள்நாட்டு நிதி 5 புள்ளி 7 பில்லியன் டாலர் வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தை அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். ஜனநாயக கட்சி, இந்த திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் பல அரச துறைகளில் முடக்கம் ஏற்பட்டது. அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் அரசுத்துறைகள் முடங்கியது, இதுவே முதல்முறை என கூறப்பட்டது.
இந்நிலையில், அரசு துறைகள் முடக்கத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வர ஏதுவாக ஒரு ஒப்பந்தத்துக்கு அதிபர் டிரம்ப் உடன்பட்டார். இதையடுத்து, வாஷிங்டன் D.C., தேசிய பூங்கா, லிங்கன் மெமோரியல் மற்றும் ஃபோர்ட்ஸ் தியேட்டரில் உள்ள பணியாளர்கள் வழக்கம்போல் தங்களது பணிக்கு திரும்பினர். இதனால், அமெரிக்காவில் 35 நாட்கள் நீடித்த அரசு துறைகள் முடக்கம் முடிவுக்கு வந்தது.