சிலி நாட்டில் குடியிருப்புப் பகுதியில் சிறியரக விமானம் விழுந்து நொறுங்கியது : 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு
Apr 17 2019 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிலி நாட்டில் குடியிருப்புப் பகுதியில் சிறியரக விமானம் விழுந்து நொறுங்கியதில், 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
சிலி நாட்டின் பியூர்ட்டோ மாண்ட் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று, 5 பயணிகள் மற்றும் விமானியுடன் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், ஒரு வீட்டின் மேல் பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலின்பேரில் வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விமானம் விபத்துக்கான காரணம் குறித்து விமானத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.