இலங்கை தாக்குதல் குறித்து உளவுத்துறை தன்னிடம் தெரிவிக்கவில்லை : அதிபர் சிறிசேன அதிர்ச்சி தகவல்
Apr 24 2019 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கை தாக்குதல் குறித்து உளவுத்துறை தன்னிடம் தெரிவிக்கவில்லை என அதிபர் சிறிசேன அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரித்ததை பொருட்படுத்தாததே கொழும்பில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. உளவுத்தகவல்களை புறக்கணித்ததற்காக மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
இந்நிலையில், தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் எச்சரிக்கையை யாரும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது இதனை அவர் கூறினார். தகவல் கிடைத்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுத்திருப்பேன் எனவும், இலங்கை பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாற்றப்பட்டு, பாதுகாப்பு பிரிவு முற்றிலும் சீரமைக்கப்படும் எனவும் சிறிசேன தெரிவித்தார்.