இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை - பிரதமர் மோடிக்கு, இம்ரான்கான் மீண்டும் கடிதம்
May 3 2019 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து, பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண, பேச்சுவார்த்தைக்கு முன் வருமாறு கடந்த மாதம் 23-ம் தேதி பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில், மீண்டும் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சனையை மையப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக எவ்வித தகவலும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.