ரஷ்ய விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியபோது விபத்து : 2 குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம்
May 6 2019 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்ய விமான விபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து Murmansk என்ற இடத்திற்கு சூப்பர் ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது. விமான சிப்பந்திகள் உட்பட 78 பயணிகளுடன் சென்ற இந்த விமானத்தில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் உடனடியாக விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் தரையிறங்க முற்பட்டது. விமானம் தரையிறங்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து, அவசரமாக விமானத்தில் பயணம் செய்தவர்களில் 35 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் இச்சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 41 பேர் பலியானார்கள். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. விமானத்தில் பலியான குடும்பத்தினர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.