மியான்மர் அரசால் கைது செய்யப்பட்ட பத்திரிக்‍கையாளர்கள் விடுவிப்பு - நீண்ட இடைவெளிக்‍குப் பிறகு உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சிக்‍ கொண்டாட்டம்

May 7 2019 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

மியான்மர் ராணுவமும், ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களும் போரிடுவது தொடர்பான உள்நாட்டு பாதுகாப்பு ரகசியங்களை கசியவிட்டதாக கைது செய்யப்பட்ட இரண்டு பத்திரிக்‍கையாளர்களை தற்போது மியான்மர் அரசு விடுவித்துள்ளது.

மியான்மரின் ராக்கீன் மாகாணத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் ராணுவத்தின் அடக்குமுறைக்கு உள்ளாகி அகதிகளாக பங்களாதேஷில் தஞ்சமடைந்தனர். இதனால் சர்வதேச ஊடகங்கள் மியான்மரில் இருந்து செய்தி சேகரித்து வந்தன. இதற்கிடையே, சட்ட விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பத்திரிகையாளர்களை யாங்கூன் போலீசார் கடந்த 2017ம் ஆண்டு கைது செய்தனர். அவர்களுக்கு உதவியாக இருந்த காவலரும் கைது செய்யப்பட்டார் என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஓராண்டுக்கும் மேலாக மியான்மர் அரசை பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதையடுத்து பத்திரிக்‍கையாளர்கள் வா லோன், யாவ் சோய் ஊ இருவரையும் மியான்மர் அரசு இன்று விடுவித்துள்ளது. வெகு நாட்களுக்‍குக்‍கின் குடும்பத்தினரை சந்தித்தபோது அவர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00