அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் - பிரசாரத்தை முன்கூட்டியே தொடங்கினார் அதிபர் ட்ரம்ப்
Jun 19 2019 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதால், அதற்கான பிரச்சாரத்தை டொனால்டு ட்ரம்ப் முன்கூட்டியே தொடங்கியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. சுமார் 20 கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து முதல்முறையாக அதிபரானார்.
முந்தைய ஆட்சியின் சில திட்டங்களை அதிரடியாக ரத்து செய்த அவர், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. 2020 நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலுக்காக டொனால்டு ட்ரம்ப் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஓர்லண்டோவில் தனது ஆதரவாளர்கள் துணையுடன் அவர் இன்று இந்தப் பிரச்சாரத்தை தொடங்கினார்.