அமெரிக்கா போர் தொடுத்தால் ஈரான் தாங்காது - அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் புதிய மிரட்டல்
Jun 27 2019 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது என்றும், அவ்வாறு போர் தொடுத்தால், அந்த போர், நீண்ட காலம் நீடிக்காது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவிற்கும், மேற்காசிய நாடுகளில் ஒன்றான, ஈரானுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நிலவும் மோதல் போக்கு தற்பாது தீவிரமடைந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம், உலக நாடுகளில் நிலவுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின், 'பாக்ஸ் பிசினஸ் நியூஸ்' என்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது என்றும், அதையும் மீறி போர் நடந்தால், அது நீண்ட காலம் நீடிக்காது என்றும் உறுதியாக தெரிவித்தார். ஏனென்றால், அமெரிக்கா ராணுவம் வலுவாக இருப்பதால் ஈரான் தாங்காது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பேச்சு, ஈரானுடன் அமெரிக்கா போரில் ஈடுபட்டால், அந்நாட்டிற்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி, குறுகிய நாட்களில் படுதோல்வி அடையச் செய்யும் என்பதை மறைமுகமாக கூறும் வகையில் அமைந்துள்ளது.