இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிப்பு - சுற்றுலா வருமானம் பெரும் வீழ்ச்சியடைந்திருப்பதாக ஆய்வில் தகவல்

Jul 5 2019 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதால், உள்நாட்டு வருவாய் கடுமையாகப் பாதிக்‍கப்பட்டுள்ளது.

அண்டை நாடான இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது, வெடிகுண்டுத் தாக்‍குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் சுமார் 250 பேர் கொல்லப்பட்டனர். இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்தனர். இந்த கொடூரச் சம்பவத்தை அடுத்து, இலங்கைக்‍கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்‍குமாறும், அங்கிருப்பவர்கள் உடனடியாக தாயம் திரும்புமாறும், சொந்த நாட்டு மக்‍களை பல்வேறு நாடுகள் அறிவுறுத்தின.

இதன் காரணமாக தற்போது இலங்கைக்‍கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இலங்கைக்‍கு சென்றிருந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை, சுமார் 60 ஆயிரம் பேர் மட்டுமே வருகை புரிந்துள்ளனர். இதனால் இலங்கையின் சுற்றுலா வருமானம் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கை செல்கின்றனர். இலங்கையின் மொத்த உள்நாட்டு வருமானத்தில் சுற்றுலா மூலம், 5 சதவீத வருவாய் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00