இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே கருத்துக் கணிப்பு : போரிஸ் ஜான்சன் பிரதமராவார் என எதிர்பார்ப்பு

Jul 8 2019 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தில், கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அதிக ஆதரவு பெற்றுள்ள Boris Johnson, பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இங்கிலாந்து பிரதமராக தெரசா மே இருந்தபோது, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரக்ஸிட் நடவடிக்கை தீர்மானம் நாடாளுமன்றத்தில் இரண்டுமுறை தோல்வியடைந்தது. இதனால், தெரசா மே, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய பிரதமருக்கான களத்தில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் Boris Johnson-ம், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் Jeremy Hunt-க்கும் இடையே, நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டைம்ஸ் நாளிதழ் சார்பில், கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், Boris Johnson-க்கு 74 சதவிகிதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. 26 சதவிகிதம் பேர் மட்டுமே Jeremy Hunt-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00