காபூல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 63-ஐ தாண்டியது : மனித தன்மையற்ற தாக்குதல் என ஆப்கான் அதிபர் விமர்சனம்
Aug 19 2019 9:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியின்போது நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் அறுபத்தி மூன்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனை, மனிதநேயமற்ற தாக்குதல் என அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி விமர்சித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் என 63க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 180 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பெற்றுள்ளது. காபூலில் இந்த ஆண்டு நிகழ்ந்த மிகவும் மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. மற்றொரு பயங்கரவாத அமைப்பான தலிபான், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் அஹ்ரப் கனி, காபூல் தாக்குதல் மனிதநேயமற்ற ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத செயல்களுக்கு பாதை அமைத்து கொடுத்தது தலிபான் தான் என்று அந்த அமைப்பையும் விமர்சித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக காபூலில் அசாதாரண நிலை நிலவுகிறது.