பெரு நாட்டின் லிமா நகரின் கடற்கரை பகுதியில் ஒரே மாதத்தில் நான்காவது முறையாக திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது
Aug 21 2019 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெருவின் தலைநகரான லிமாவில் ஏற்கெனவே 3 முறை கரை ஒதுங்கிய திமிங்கலம் ஒன்று, தற்போது உடலில் காயம் காரணமாக, 4வது முறையாக மீண்டும் நேற்று கரை ஒதுங்கியுள்ளது. இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக மீட்புப்படையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். விரைந்து வந்த மீட்புப்படையினர் திமிங்கலத்தை மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்டனர். மூன்று வயது நிறைந்த இந்த திமிங்கலத்தின் உடலில் காயங்கள் இருப்பதால் அது நீந்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகதான் இந்த திமிங்கலம் தற்போது நான்காவது முறையாக கரை ஒதுங்கியுள்ளதாகவும் கூறினர்.