இந்தியா வந்துள்ள ஜாம்பியா அதிபர் எட்வர் லுங்குக்கு சிவப்பு கம்பள வரவேற்பு - முக்கிய துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு
Aug 21 2019 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு முறைப் பயணமாக, இந்தியா வந்துள்ள, ஜாம்பியா அதிபர் எட்கர் லுங்குக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜாம்பியா அதிபர் எட்கர் லுங்கு, மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக, இன்று காலை, இந்தியா வந்தார். அவரை, டெல்லி விமான நிலையத்தில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் திரு. வி. முரளீதரன் வரவேற்றார்.
ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற அதிபர் எட்கர் லுங்கு, ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்தார். பின், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை தனித்தனியே சந்தித்து, அதிபர் எட்கர் பேச உள்ளார். அப்போது, இந்தியா - ஜாம்பியா இடையே, வேளாண், வர்த்தகம், சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில், ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது.