ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் கிளரும் பாகிஸ்தான் - ஐ.நா. சபையில் இம்ரான்கான் பேச உள்ளதாக தகவல்
Aug 24 2019 11:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டம், அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இம்ரான் கான் பேச உள்ளதாக, பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அடுத்த மாதம் 23ம் தேதி முதல், 4 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இம்ரான்கான், மலேஷியா உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும், 27ம் தேதி, ஐ.நா.வில் உரையாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.