அமெரிக்க சீனா இடையே வலுக்கும் வர்த்தகப் போர் - சீனாவிலிருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற ட்ரம்ப் அதிரடி உத்தரவு
Aug 24 2019 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க சீனா இடையே வர்த்தக போர் உச்சகட்டத்தை எட்டி இருப்பதால், சீனாவை விட்டு வெளியேற அமெரிக்க நிறுவனங்களை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவுக்கு சீனா தேவையில்லை என்றும், வெளிப்படையாக கூறினால் சீன பொருள் இல்லாமல் அமெரிக்கா இதைவிட நன்றாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சீனாவிடம் கடந்த பல ஆண்டுகளாக பல லட்சம் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை அமெரிக்கா இழந்திருப்பதாக கூறியுள்ள டிரம்ப், சீனாவை முட்டாள் தனமாக நம்பி அமெரிக்கர்கள் இழப்பையே சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கர்களின் நூற்றுக்கணக்கான, லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள அறிவுசார் சொத்துரிமையை சீனா திருடி விட்டதாகவும், அதை தொடர சீனர்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார். சீனாவின் எண்ணம் ஈடேற விடமாட்டேன் என்று தெரிவித்துள்ள டிரம்ப், சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி மாற்று இடத்தை தேட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.