ஜி7 உச்சி மாநாட்டைக் கண்டித்து போராட்டம் : போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீச்சு
Aug 25 2019 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஃபிரான்சில் நடைபெற்றுவரும் ஜி-7 மாநாட்டைக் கண்டித்து, போராட்டம் நடத்தியவர்களை, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விரட்டினர்.
ஜி-7 அமைப்பின் 45-வது மாநாடு, ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள Biarritz நகரில் நடைபெற்று வருகிறது. மாநாட்டைக் கண்டித்து, ஆயிரக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழலை அழிக்கவேண்டாம் என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், Bayonne நகரில், மாநாட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் விரட்டியதால், அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.