அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீ - அரிய வகை பாம்புகள் தீயில் கருகி அழியும் பரிதாபம் : தீயை அணைக்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரம்
Aug 25 2019 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க ராணுவத்தினர் உட்பட ஆயிரக்கணக்கான வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் கடந்த 5 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. பிரேசிலில் பாரா, ரோண்டோனியா, ரோரைமா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இந்த காட்டுத்தீ எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் நேற்று முதல் ராணுப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரோண்டோனியாவில் சுமார் 10 கிலோமீட்டர் பரப்பளவில் எரிந்து கொண்டிருக்கும் வனப்பகுதியில், பல அரியவகை பாம்புகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன. அமேசான் காடுகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை பாம்புகள், மூலிகைகள் என அனைத்தும் அழிந்து வருவதாக சுற்றுவட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.