அமேசான் காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரம் : விமானம், ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க முயற்சி
Aug 26 2019 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொலிவியாவில் உள்ள அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை, ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் மூலம் அணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
உலக அளவில் 20 சதவீத ஆக்சிஜனை வெளியிடுவதால், உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளின் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 8 நாடுகளில் பரந்து விரிந்துள்ள அமேசான் காடுகளின் பெரும்பாலான பகுதிகள் பிரேசில் மற்றும் பொலிவியாவில் உள்ளன. கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பதற்கு குளோபல் சூப்பர் டேங்கர் நிறுவனத்திடம் இருந்து போயிங் 747 ரகத்தை சேர்ந்த விமானத்தை 14 பேர் அடங்கிய குழுவினர் பொலிவியா வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சூப்பர் டேங்கர் விமானம் ஒரே தடவையில் சுமார் 71 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கீழே கொட்டும் வல்லமை கொண்டது. சூப்பர் டேங்கருடன் இணைந்து ஹெலிகாப்டர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதேபோல், ஏராளமான தீயணைப்பு வீரர்களும், தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.