நாட்டிற்கு துரோகம் செய்தால் அதிபரைக் கூட பதவியில் இருந்து நீக்கும் சட்டம் : உக்ரைன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Sep 12 2019 10:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டிற்கு துரோகம் செய்தால் அதிபரைக் கூட பதவியில் இருந்து நீக்கும் சட்டம், உக்ரைன் நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உக்ரைனின் புதிய அதிபராக, விளாடிமிர் ஜிலென்ஸ்கி, கடந்த மே மாதம் பதவியேற்றார். இவர், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேசத் துரோகத்தில் ஈடுபட்டால், அதிபரைக் கூட உடனடியாக பதவி நீக்கம் செய்யக்கூடிய வகையிலான சட்டம் இயற்றப்படும் என, வாக்குறுதி அளித்தார்.
அதன்படி கடந்த மாதம், தேசத் துரோகத்தில் ஈடுபடும் அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான புதிய சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா பல கட்ட விவாதங்கள் முடிவடைந்து, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன், அண்மையில், சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், தேசத் துரோகம் மற்றும் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டால், அதிபரை நாடாளுமன்றம் உடனடியாக பதவிநீக்கம் செய்யலாம்.