பிலிப்பைன்ஸில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பை அளித்தால் 1 கிலோ அரிசி இலவசம் : பிளாஸ்டிக்கை அழிக்க புதிய திட்டம் அறிமுகம்

Sep 13 2019 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிலிப்பைன்ஸ் நாட்டில், பிளாஸ்டிக் குப்பைகளை அளித்தால், அரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததை அடுத்து, அதனால் கடல் மற்றும் நிலங்களில் வாழும் உயிரினங்களின் இறப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிக பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ் முதலிடம் வகிப்பதாகவும், அந்நாட்டில் திடக்கழிவு குறித்த சட்டங்கள் மோசமாக இருப்பதாகவும் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்‍கின்றன. இதனையடுத்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் தலைநகர் மணிலா அருகே உள்ள பேயனான் கிராமத்தில், பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கவும், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் பசியை போக்கவும் வேண்டி, அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்த திட்டத்தின் படி, 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அரசிடம் ஒப்படைக்கும் மக்களுக்கு, ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் அங்குள்ள ஏழை மக்களுக்கு, வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00