இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வீட்டில் ரூ.40 கோடி மதிப்பிலான கழிப்பறை திருட்டு : பணியாளரிடம் விசாரணை
Sep 15 2019 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வீட்டிலிருந்த தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறை திருடப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து நாட்டின் தலைநகர், லண்டன் வுட்ஸ்டாக் பகுதியில் அமைந்துள்ளது அந்நாட்டு முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குடும்பம் வாழ்ந்த அரண்மனை. இந்த அரண்மனையில், கடந்த 2016ம் ஆண்டு, இத்தாலியைச் சேர்ந்த கலைஞர் மரிஷியொ கேட்டலன் என்பவர், 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறையை உருவாக்கினார்.
சுமார் 40 கோடி ரூபாய் இந்திய மதிப்பு கொண்ட இந்த கழிப்பறையை, அண்மையில், மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து, அதைத் தேடும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். தங்கக் கழிப்பறை திருடுப் போனதை அடுத்து, அரண்மனை மூடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, அரண்மனையின் பணியாளர் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருவதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.