அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி : பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்பு

Sep 16 2019 1:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று உரையாற்றவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஐ.நா. பொதுசபையின் 74வது கூட்டம் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக 22ம் தேதி ஹுஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் அவர் கலந்துள்ள இருக்கிறார். 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஜி7 மாநாட்டின்போது பிரதமர் திரு.மோடி விடுத்த கோரிக்கையையடுத்தே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியிலான நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் கலந்துகொண்டு உரையாற்றுவதும் இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00