ஸ்பெயின் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி
Sep 16 2019 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயின் நாட்டின் தென் கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் திடீரென வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமான கார்கள் மூழ்கின. மழை வெள்ளம் காரணமாக சுமார் 3,500க்கும் மேற்பட்டோர் தங்கள் குடியிருப்புகளை இழந்துள்ளனர். மழை வெள்ளம் காரணமாக இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.