சிரியாவில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை - ரஷ்யா, துருக்கி, ஈரான் நாட்டு அதிபர்கள் சந்தித்து முக்கிய ஆலோசனை
Sep 17 2019 9:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியா விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் எர்டோகன், ஈரான் அதிபர் ஹஸன் ரவ்ஹானி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
சிரியாவில் உள்நாட்டு அரசியலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசாங்கத்தின் தாக்குதல் காரணமாக ஏராளமானோர் துருக்கி நாட்டிற்கு இடம் பெற தொடங்கியுள்ளனர். சிரியாவில் அமைதியை ஏற்படுத்த ரஷ்யா, துருக்கி, ஈரான் போன்ற நாடுகள் முயற்சித்து வரும் நிலையில், இந்நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி குறிப்பிட்டார். சிரியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா, துருக்கி, ஈரான் நாடுகளுக்கு மேலும் அதிக பொறுப்புணர்வு தேவை என துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார். இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சிரியாவில் இறுதிக்கட்ட சமரசம் ஏற்படும் என நம்புவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.