உலகின் பிற நாடுகளைவிட சீனா மிகப்பெரிய ராணுவத்தை கட்டமைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் - உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் கருத்து
Sep 22 2019 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகின் பிற நாடுகளைவிட மிகப்பெரிய ராணுவத்தை சீனா கட்டமைத்து வருவதாகவும், இது உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், அண்மைக்காலமாக சீனா தனது படைபலத்தை பெருக்கி வருவதாகக் கூறினார். உலகின் மற்ற நாடுகளைவிட, பலமான ஒரு ராணுவத்தை மிக வேகமாக கட்டமைத்து வருவதாகவும் தெரிவித்தார். உலக நாடுகளுக்கு இது அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறிய அவர், இதற்காக அந்நாடு தங்கள் நாட்டு பணத்தை பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். அமெரிக்காவின் 500 பில்லியன் டாலர் தொகையை பயன்படுத்திக்கொள்ள தங்கள் நாட்டு முன்னாள் அதிபர்கள் அனுமதித்துவிட்டதாகவும், இனி தான் அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். சீனப் பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும், வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.