இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் - தலைநகர் ஜகார்தா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பீதி
Sep 22 2019 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகர்தா நகரில் இன்று அதிகாலை 2.50 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது ஆறு புள்ளி நான்காக பதிவாகியுள்ளது. மலுகு தெங்கரா பராம் மாவட்டத்தில் இருந்து, 165 கிலோமீட்டர் தொலைவில், கடற்படுகைக்கு அடியில் 11 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் மையம் தெரிவித்துள்ளது. சுனாமி உருவாவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாததால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.