பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க திட்டம் : பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதால் எப்.ஏ.டி.எப்., அதிரடி

Sep 23 2019 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்காத காரணத்தால், பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்க, நிதி நடவடிக்கை பணிக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்க, 27 அடிப்படை விதிகளை, எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு வகுத்துள்ளது. இந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்க, பாகிஸ்தான் தவறி விட்டது.

இதனால், கிரே எனப்படும் இளங்கருப்பு பட்டியலில், பாகிஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானை, கருப்புப் பட்டியலில் சேர்க்க, நிதி நடவடிக்கை பணிக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆலோசிப்பதற்காக, பிரான்ஸ் தலைநகர் பாரீசில், அடுத்த மாதம் நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானை கிரே பட்டியலில் ‍சேர்த்து ஓராண்டாகும் நிலையில், கடந்த ஜூலை மாதத்தில், பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததாக, அந்நாட்டின் மீது மட்டும் 23 வழக்குகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00