சிரியா மீதான தாக்குதலை தொடர்ந்து துருக்கிக்கு முற்றும் நெருக்கடி : ராணுவ நடவடிக்கையை நிறுத்த சீனா வலியுறுத்தல்
Oct 15 2019 7:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியா மீதான மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என துருக்கியை சீனா வலியுறுத்தியுள்ளது.
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குர்து போராளிகள் மட்டுமல்லாது அப்பாவி மக்களும் அதிகளவில் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் துருக்கிக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. துருக்கி மீது பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சிரியாவில் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கையை துருக்கி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனாவும் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச விவகாரங்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்துவதை சீனா எதிர்ப்பதாக தெரிவித்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் Geng Shuang, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.