ஹாங்காங் போராளிகளுக்கு ஆதரவாக மசோதா நிறைவேற்றிய அமெரிக்கா - ஹாங்காங் தலைமை நிர்வாகி கண்டனம்
Oct 17 2019 8:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில், ஹாங்காங் ஜனநாயக போராளிகளுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவிற்கு, அந்நாட்டு தலைமை நிர்வாகி கேரி லேம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங் மக்களுக்கான தன்னாட்சி அதிகாரம் முறையாக வழங்கப்படுவதை கண்காணிக்கவும், அங்கு மனித உரிமைகள் நடைமுறைபடுத்தப்படுவதையும் உறுதி செய்ய,
ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மசோதா 2019 என்ற மசோதா, அமெரிக்க கீழவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லேம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது வருடாந்திர கொள்கை உரையை நிகழ்த்திய அவர், அமெரிக்க நாடாளுமன்றம், முழுக்க முழுக்க வெளிநாட்டு விவகாரங்களிலேயே தலையிட்டு வருவதாக குற்றம் சாட்டினார். ஹாங்காங்கின் மனித உரிமைகள் குறித்து வெளிநாட்டு நாடாளுமன்றம் கவலைப்படத் தேவையில்லை எனவும் கேரி லேம், அமெரிக்காவை கடுமையாக சாடினார்.