ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தை வார இறுதி நாட்களில் மூட முடிவு - கடுமையான நிதி பற்றாக்குறையால் நடவடிக்கை
Oct 19 2019 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, நிதி பற்றாக்குறை காரணமாக, நியூயார்க்கில் உள்ள தலைமையகத்தை வார இறுதி நாட்களில் மூடி வைக்க முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு, ஐக்கிய நாடுகள் சபை இயங்கி வருகிறது. இதில், 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஐ.நா. பொதுச்செயலர், அன்டோனியோ கட்ரஸ், அண்மையில் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ஐ.நா. சபைக்கு, கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை, விரைந்து அனுப்ப வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக, நியூயார்க்கில் உள்ள தலைமையகம் வார இறுதி நாட்களில் மூடப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை ஐ.நா. வெளியிட்டுள்ளது.