ஸ்பெயினில் தொடர்ந்து 5வது நாளாக பொதுமக்கள் போராட்டம் - கேட்டலோனியாவை தனி நாடாக அறிவிக்கக் கோரி முழக்கம்
Oct 19 2019 2:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேட்டலோனியாவை தனி நாடாக அறிவிக்கக் கோரி ஸ்பெயினில் தொடர்ந்து 5வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் அங்கமான கேட்டலோனியாவை தனி நாடாக அறிவிக்க் கோரி, போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதற்கு ஆதரவாக இருந்த அமைச்சர்களை தேசத்துரோக வழக்கில் ஸ்பெயின் அரசு கைது செய்தது. அவர்களுக்கு 9 முதல் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயின் நாட்டில் பொதுமக்கள் பேரணி நடத்தியதோடு, தொடர்ந்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். பார்சிலோனோவில் குவிந்த போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன். அரசு பேருந்து உள்ளிட்டவற்றை தீயிட்டுக் கொளுத்தினர். இதனால், அப்பகுதியே போராட்டக் களமாக காட்சியளித்தது.