அபுபக்கர் இறப்பை உறுதி செய்தது ஐ.எஸ். அமைப்பு : புதிய தலைவராக இப்ராஹிம் அல்- ஹஷிமி அல் குரேஷி அறிவிப்பு
Nov 1 2019 10:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க ராணுவத்தினரால் அபுபக்கர் அல் பாக்தாதி சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிசெய்துள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, புதிய தலைவரையும் அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிவரும் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி தங்களின் ராணுவ தாக்குதலில் உயிரிழந்ததாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். இது தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் அமெரிக்க ராணுவம் வெளியிட்டது. இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதை ஐ.எஸ் அமைப்பு உறுதிசெய்துள்ளது. மேலும், புதிய தலைவராக இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷியை அறிவித்ததோடும், அபுபக்கரின் இறப்பு தொடர்பாக அமெரிக்காவை பழிவாங்க போவதாகவும் கூறியுள்ளது.