சீனாவில் 2019ம் ஆண்டுக்கான விமான கருத்தரங்கம் : பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது
Nov 3 2019 3:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில், 2019ம் ஆண்டுக்கான விமான கருத்தரங்கம், பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தின் நான்சாங் நகரில் 2019ம் ஆண்டுக்கான விமான கருத்தரங்கம் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில், விமானம், விண்கலம் மற்றும் குட்டி விமானங்களில் கண்காட்சி நடைபெறவுள்ளன.
ஹெலிகாப்டர்கள், சிறிய தூரம் செல்ல கூடிய போக்குவரத்து விமானம், நீர் மற்றும் நிலத்தில் பயணிக்க கூடிய விமானங்கள் என, சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து சுமார் 100 விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பாராகிளைடிங், பாராசூட், பலூன் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இந்த கருத்தரங்கில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கருத்தரங்கம் தொடக்க நாளில் நடத்தப்பட்ட பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.