அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யக்கோரும் தீர்மானம் தாக்கல் : அடுத்த வாரம் விசாரணை தொடக்கம்
Nov 7 2019 6:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யக்கோரும் விவகாரத்தில் அடுத்த வாரம் முதல் பொது விசாரணை துவங்கப்படவுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் உக்ரைன் நாட்டை தலையீட வைப்பதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் சதி தீட்டம் தீட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதில் தனது அரசியல் எதிரியும், முன்னாள் துணை அதிபரும், 2020ம்ஆண்டில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட இருக்கும் ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடாத வகையில் செய்வதற்கு அதிபர் ட்ரம்ப் செய்த திட்டங்களை கூறினார். இந்த பரபரப்பான புகார் மூலம் அதிபர் டிரம்ப்பை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என்றாலும், இன்னும் 14 மாதங்களில் நடைபெறவிருக்கும் அடுத்த அதிபர் தேர்தலில் இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்வதற்கான விசாரணையும் தொடங்கப்படவுள்ளது.