பொலியாவில் நடைபெற்ற தேர்தல் முறைகேடுகள் எதிரொலி - எந்த நேரத்திலும் கைதாகலாம் என்பதால் நாட்டை விட்டு வெளியேற முன்னாள் அதிபர் மோரல்ஸ் திட்டம்
Nov 12 2019 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் சொந்த நாட்டை விட்டு வெளியேற பொலிவியா முன்னாள் அதிபர் மோரல்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொலிவியாவில் அதிபர் இவோ மோரல்சு மீது தேர்தல் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்ய உதவியதாக தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் மோரல்சும் கைது செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.