வங்கதேசத்தில் ரயில்கள் மோதிக்கொண்டதில் 15 பேர் பலி - 60 பேர் காயம் - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம்
Nov 12 2019 1:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்களாதேஷில் 2 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பங்களாதேஷின் பிரம்மன்பாரியா மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சிட்டகாங் சென்று கொண்டிருந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலும், டாக்கா சென்று கொண்டிருந்த நிதிஷா எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று அதிகாலை 3 மணியளவில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.