ஹாங்காங்கில் மீண்டும் தீவிரமடைந்த போராட்டம் : ஹோட்டலிலேயே முடங்கிக்கிடக்கும் சுற்றுலாப்பயணிகள்
Nov 19 2019 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹாங்காங்கில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஹாங்காங்கில் உள்ள Kowloon மாவட்டத்தின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வன்முறை மூண்டதால் அங்கு பெரும் பதட்டமான சூழல் உருவானது. இதையடுத்து மீண்டும் அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலா சென்றுள்ள சுற்றுலாப்பயணிகள் தங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களிலேயே முடங்கிக்கிடக்கின்றனர்.