பாரிசில் கிருஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் நிகழ்வு : சாலையோர மரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு
Nov 26 2019 8:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில், சாலை ஓரம் உள்ள மரங்கள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சேம்ஸ் எலிஸிஸ் பகுதியில், சாலையோரம் 400-க்கும் மேற்பட்ட மரங்கள் அமைந்துள்ளன. கிருஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த மரங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த வண்ண விளக்குகளை நடிகை LUDIVINE SAGNIER, பாரீஸ் மேயர் ANNE HIDALGO ஆகியோர் குழந்தைகளுடன் இணைந்து இந்த விளக்குகளை ஏற்றிவைத்தனர்.
இதற்காக எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், குறைந்தளவு மின்சாரமே தேவைப்படுகிறது என தெரிவித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், கிருஸ்துமஸ் பண்டிகை முடிந்த பிறகும், வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை வண்ண விளக்குகள் தொடர்ந்து எரியும் என தெரிவித்தனர்.