மதுரையில் நகைக்காக மூதாட்டி கழுத்து அறுத்து கொலை - வீட்டுக்குள் பதுங்கியிருந்த கொலையாளி கைது
Nov 27 2019 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்று முடியாததால், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். மதுரை திருமங்கலம் அன்னகாமு தோட்டத்தில் வசித்து வந்த காவேரி அம்மாள் என்பவர், பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்றிரவு எதிர் வீட்டைச் சேர்ந்த காதர் பாஷா ஒளி என்பவர், மூதாட்டி வீட்டினுள் நுழைந்து, அவரின் செயினை பறிக்க முயன்று முடியாததால், கழுத்தை அறுத்து கொலை செய்தார். தகவலின்பேரில் வந்த போலீசார், கொலை செய்துவிட்டு வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்த கொலையாளியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.