ஹாங்காங் கப்பலை கடத்திய நைஜீரிய கொள்ளையர்கள் : கடத்தப்பட்ட 19 பேரில் 18 பேர் இந்தியர்கள்
Dec 5 2019 10:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நைஜீரிய கடற்பகுதியில் 18 இந்தியர்களுடன் ஹாங்காங் கப்பலை கொள்ளையர்கள் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங் நாட்டிற்கு சொந்தமான VLCC, NAVE CONSTELLATION எண்ணெய் கப்பல் 19 பேர் அடங்கிய குழுவினருடன் நைஜீரிய கடற்பகுதி வழியாக பயணித்துள்ளது. இக்கப்பலில் நுழைந்த கடற்கொள்ளையர்கள், 19 பேரையும் கடத்தி சென்றுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் 18 பேர் இந்தியர்கள் மற்றும் ஒருவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பது தொடர்பாக நைஜீரிய நாட்டு அதிகாரிகளை இந்திய அதிகாரிகள் தொடர்புகொண்டு கோரியுள்ளனர்.