அமெரிக்காவின் Pearl துறைமுகத்தில் மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு - முன்னெச்சரிக்கை கருதி தற்காலிகமாக மூடப்பட்டது துறைமுகம்
Dec 5 2019 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் pearl துறைமுகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து, துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை. 1941-ம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரின்போது, டிசம்பர் 7-ம் தேதிதான், pearl துறைமுகத்தின் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியது. இதன் நினைவு தினத்திற்கு, இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், நடந்துள்ள இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.