ஆல்ஃப பெட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுளின் மேலும் 8 நிறுவனங்களுக்கு சி.இ.ஓ. ஆகிறார் சுந்தர் பிச்சை
Dec 5 2019 9:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆல்ஃப பெட் நிறுவனத்தை தொடர்ந்து, கூகுளின், மேலும் 8 நிறுவனங்களுக்கு சுந்தர் பிச்சை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார். சென்னையை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பேற்ற பிறகு, அந்நிறுவனம் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றது. இதையடுத்து சுந்தர் பிச்சையின் திறமையை பாராட்டும் விதமாக, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃப பெட் நிறுவனத்திற்கும் சுந்தர் பிச்சை, நேற்று முன்தினம், சி.இ.ஓ.-வாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கூகுளின் மேலும் 8 நிறுவனங்களுக்கு சுந்தர் பிச்சையையே சி.இ.ஓ.-வாக நியமிக்க கூகுள் முடிவு செய்துள்ளது.